Home » » நடிகைகளுக்கு இது ஒரு பாடம் பணம், சுகம் கடைசியில் மரணம் ?

நடிகைகளுக்கு இது ஒரு பாடம் பணம், சுகம் கடைசியில் மரணம் ?


நிஷா..இவர் பெயரைக் கேட்டாலே இளவட்டங்கள் குஷி ஆகிவிடுவார்கள். கமல்,ரஜினி துவங்கி சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா.. சிவராஜ் குமார் , விஷ்ணுவர்தன் சன்னிதியோல், கோவிந்த, அணில் கபூர் என ஐந்து மொழிகளில் பட்டையை கிளப்பியவர் நிஷா.

கமலுக்கு இவர் மிகவும் ராசியான நாயகி. டிக்டிக்டிக் துவங்கி நிறைய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.உட்கார நேரமின்றி பறந்து கொண்டே இருந்தார்..!

அப்போது மத்திய மந்திரியாக இருந்த பிரபலம் அவர். அவரின் வாரிசு கோடா அடுத்து மந்திரியாக இருந்தார்.! அந்த மத்திய     அமைச்சர் சபலக் கேஸ்…!நிறைய பெண்களோடு தொடர்பு.

அவருக்கு எய்ட்ஸ் இருந்தது. அது தெரியாமல் இந்த நடிகையோடு உறவு கொள்ள நிஷாவிற்கும் எய்ட்ஸ். அந்த மந்திரி இறந்து போனார். ஆனால் எய்ட்ஸ் என்கிற காரணம் மறைக்கப்பட்டது..!



நிஷாவிற்கு தனக்கு எய்ட்ஸ் என்று தெரிந்த கணமே நொறுங்கிப் போனார். கதறி அழுதார்..! காரணம் அந்த அமைச்சர் என்று தெரிந்து கதறினார்..!

நடித்துக்கொண்டு இருந்த படங்களை முடித்தார். அமைதியாக தமிழ்நாடு வந்தார். நாகூரில் சத்தமில்லாமல் ஒதுங்கிக் கொண்டார்.

கமல் தேடி அலைந்து ஒருவழியாக கண்டு பிடித்து போய்ப் பார்த்தார். அவரிடம் நிஷா தனக்கு எய்ட்ஸ் என்று கூறி அழுதிருக்கிறார்..! கமல் துடித்துப் போனார்.

என்ன செய்தாவது காப்பாற்றிவிட போராடினார் கமல்..! ம்ஹூம் எய்ட்ஸ் ஒன்றுமே செய்ய முடியாது..!

நிஷாவின் கடைசிக் காலம் மிகப் பயங்கரம்..! அனாதையாக தர்கா வாசலில் படுத்துக் கிடந்தார். உறவுகள் எல்லாம் காசோடு ஓடிவிட்டனர்.

பிச்சை எடுத்து சாப்பிட்டார். ஒரு நாள் வீதியில் செத்துக் கிடந்தார்..!! அவர் இறந்த பின் தான் அவர் ஒரு டாப் லெவல் ஹீரோயின் என்பதே மற்றவர்களுக்கு தெரியும்..!

நகராட்சி வண்டியில் எடுத்துப் போட்டு கொண்டு போய் எரித்தார்கள்…!!!

Popular Posts